Wednesday, December 17, 2008

Ranjani-Gayatri - 3.2 - sreenivAsa tiruvenkata - hamsAnandi



இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இராகம்: ஹம்ஸானந்தி
தாளம்: ஆதி



ஸ்ரீநிவாச திருவேங்கடமுடையாய்!
ஜெய கோவிந்த முகுந்தா அனந்தா!
தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்!
தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய்?
(ஸ்ரீநிவாச)



ஜகம் புகழும் ஏழுமலை மாயவனே!
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே!
ஜகன்னாதா சங்க சக்ர தரனே!
திருவடிக்கு அபயம் அபயம் ஐயா!
(ஸ்ரீநிவாச)



No comments:

Post a Comment